search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வாலாஜாபேட்டை அருகே வேன் மோதி டிரைவர் பலி

    வாலாஜாபேட்டை அருகே வேன் மோதி டிரைவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே பூட்டுத்தாக்கு கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது 35), வாலாஜாபேட்டையில் உள்ள கல்குவாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் மனைவியுடன் ராணிப்பேட்டை அருகே புளியந்தாங்கல் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். முசிறி கூட்ரோடு அருகே சாலையை கடந்தபோது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற வேன் அசோகனின் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அசோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×