search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    ராஜபாளையம் அருகே லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி

    ராஜபாளையம் அருகே லாரி மோதி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள எம்.பி.கே. புதுப்பட்டியை சேர்ந்த கருப்பழகு மகன் மாசானன் (வயது25). இவர் தனியார் நூற்பாலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கோதைநாச்சியார்புரம் விலக்கில் சாலையை கடக்கும் போது ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்த லாரி மோதியதில் மாசானன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கருப்பழகு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×