என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வந்தவாசி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் தற்கொலை
Byமாலை மலர்4 July 2020 10:40 AM GMT (Updated: 4 July 2020 10:40 AM GMT)
வந்தவாசி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக செய்யாறு உதவி கலெக்டர் விமலா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
வந்தவாசி:
வந்தவாசி தாலுகா கீழ்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25), பெயிண்டர். இவருடைய மனைவி சங்கீதா (20). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. சங்கீதா கர்ப்பமாக இருந்தார்.
இதனையடுத்து அவர் வந்தவாசியை அடுத்துள்ள கீழ்நமண்டி கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி சங்கீதா விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சங்கீதாவின் தந்தை பிச்சாண்டி தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்தார்.
தற்கொலை செய்து கொண்ட சங்கீதாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் செய்யாறு உதவி கலெக்டர் விமலா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
வந்தவாசி தாலுகா கீழ்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25), பெயிண்டர். இவருடைய மனைவி சங்கீதா (20). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. சங்கீதா கர்ப்பமாக இருந்தார்.
இதனையடுத்து அவர் வந்தவாசியை அடுத்துள்ள கீழ்நமண்டி கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி சங்கீதா விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சங்கீதாவின் தந்தை பிச்சாண்டி தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்தார்.
தற்கொலை செய்து கொண்ட சங்கீதாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் செய்யாறு உதவி கலெக்டர் விமலா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X