search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    முதியவரிடம் நகை பறித்த வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது

    முதியவரிடம் நகை பறித்த வழக்கில் ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் ராமகிருஷ்ணா ரோடு சண்முகா காலனியை சேர்ந்தவர் ரங்கராஜன் (வயது 80). கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு ஆட்டோவில் 3 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் முதியவரிடம் கொரோனா நிதி தருமாறு கேட்டனர். அப்போது அவர்கள் திடீரென ரங்கராஜன் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நகை பறிப்பு தொடர்பாக அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக், சுகன்ஹாசன், கார்த்திகேயன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஆட்டோ டிரைவரான அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சேகர்(23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருடைய ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சேகருக்கு சளி, இருமல் இருந்ததால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட உள்ளது.
    Next Story
    ×