search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மேலூர் அருகே கண்மாயில் மண் அள்ளியவர்கள் கைது

    மேலூர் அருகே வெள்ளலூரில் உள்ள கண்மாயில் மண் அள்ளியவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூர்:

    மேலூர் அருகே வெள்ளலூரில் உள்ள கண்மாயில் எந்திரத்தை பயன்படுத்தி கிராவல் மண் அள்ளுவதாக கீழவளவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் டிப்பர் லாரி டிரைவர் பதினெட்டாங்குடியை சேர்ந்த சிவா(வயது 28), ஜே.சி.பி. டிரைவர் அ.கோயில்பட்டியை சேர்ந்த சுந்தர்(21), உரிமையாளர் மேலூரை சேர்ந்த மீராஉசேன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×