search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திண்டுக்கல் அருகே இளம்பெண் தற்கொலை- கணவர் உள்பட 3 பேர் கைது

    திண்டுக்கல் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகேயுள்ள வாழைக்காய்பட்டியை சேர்ந்தவர் பழனிகுமார். பெயிண்டிங் ஒப்பந்ததாரர். இவரது மனைவி குணஷீலா என்ற கீதா (வயது 24). இவர்களுக்கு பத்மேஸ்வரன் (6) கவினேஷ் (4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கீதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கீதாவை தற்கொலைக்கு தூண்டியது அவரது கணவர் பழனிகுமார், அவருடைய தாய் பார்வதி மற்றும் பழனிகுமார் அண்ணன் மாரிமுத்து ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×