என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.8.68 கோடி மானியம்
Byமாலை மலர்15 Jun 2020 2:58 PM GMT (Updated: 15 Jun 2020 2:58 PM GMT)
பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆயிரத்து 679 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.8.68 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தில் தென்னை, கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், நிலக்கடலை, துவரை மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஆயிரத்து 679 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.8.68 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில் தெளிப்பு நீர் கருவிகள், மழைத்தூவுவான் ஆகியவற்றை சிறு-குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகள் 75 சதவீத மானியத்திலும் பெறலாம்.
கிணறுகளில் இருக்கும் குறைந்த நீரை கொண்டு செய்யப்படும் நுண்ணீர் பாசனம் மூலம், 30-40 சதவீத நீரை மிச்சப்படுத்தலாம். நீரில் கரையும் உரங்கள் மூலம் 20 சதவீத மகசூல் கூடுதலாக பெறலாம். இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, சிறு- குறு விவசாயிகளுக்கான சான்று, அடங்கல், கணினி சிட்டா ஆகிய ஆவணங்களுடன், அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களை அணுகலாம். மேலும் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் நேரடியாக பதிவு செய்யலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தில் தென்னை, கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், நிலக்கடலை, துவரை மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஆயிரத்து 679 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.8.68 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில் தெளிப்பு நீர் கருவிகள், மழைத்தூவுவான் ஆகியவற்றை சிறு-குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகள் 75 சதவீத மானியத்திலும் பெறலாம்.
கிணறுகளில் இருக்கும் குறைந்த நீரை கொண்டு செய்யப்படும் நுண்ணீர் பாசனம் மூலம், 30-40 சதவீத நீரை மிச்சப்படுத்தலாம். நீரில் கரையும் உரங்கள் மூலம் 20 சதவீத மகசூல் கூடுதலாக பெறலாம். இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, சிறு- குறு விவசாயிகளுக்கான சான்று, அடங்கல், கணினி சிட்டா ஆகிய ஆவணங்களுடன், அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களை அணுகலாம். மேலும் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் நேரடியாக பதிவு செய்யலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X