என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்- வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை
Byமாலை மலர்12 Jun 2020 12:23 PM GMT (Updated: 12 Jun 2020 12:23 PM GMT)
புல்லாவெளி பகுதியில் காட்டு யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
பெரும்பாறை:
எனவே புல்லாவெளி பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள், மாவட்ட வன அலுவலர் வித்யாவிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து கன்னிவாடி வனச்சரகர் சக்திவேல் தலைமையில் செம்பட்டி பிரிவு வனவர் அப்துல் ரகுமான் வனக்காப்பாளர் சங்கர் மற்றும் வனகாவலர்கள் புகைபோட்டும், பட்டாசு வெடித்தும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாறை அருகே புல்லாவெளி, நேர்மலை, புலையன் வளவு, கூட்டுக்காடு, ஆத்துக்காடு, எட்டுவீடு, தடியன்குடிசை உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் யானைகள், அப்பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, காபி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன.
மேலும் தோட்டங்களில் உள்ள வீடுகளையும் அவை சூறையாடி வருகின்றன. இந்த பகுதியில் 3 குட்டிகள் உள்பட 8 யானைகள் கடந்த 1 மாதத்திற்கு மேலாக முகாமிட்டுள்ளன. தற்போது புல்லாவெளி பகுதியில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால், அவை முகாமிட்டு பழங்களை சுவைத்து வருகின்றன. யானைகள் நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டிய சூழல் உள்ளது.
எனவே புல்லாவெளி பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள், மாவட்ட வன அலுவலர் வித்யாவிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து கன்னிவாடி வனச்சரகர் சக்திவேல் தலைமையில் செம்பட்டி பிரிவு வனவர் அப்துல் ரகுமான் வனக்காப்பாளர் சங்கர் மற்றும் வனகாவலர்கள் புகைபோட்டும், பட்டாசு வெடித்தும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X