என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாஞ்சா நூல் விற்றால் கடும் நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
Byமாலை மலர்10 Jun 2020 7:28 AM GMT (Updated: 10 Jun 2020 7:28 AM GMT)
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாஞ்சா நூல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மாஞ்சா நூலில் தயார் செய்யப்பட்ட காற்றாடிகள் பறக்க விடப்படுவதாக தகவல்கள் வந்துள்ளது. இதுபோன்ற செயல்களினால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் கழுத்தில் கண்ணாடி துகள்களால் தயார் செய்யப்பட்ட மாஞ்சா நூல் சிக்கி படுகாயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
மீறி யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீதும், 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றால் சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர். மேலும் கடைகளில் யாரேனும் மாஞ்சா நூல் மற்றும் மாஞ்சா நூல் தயார் செய்ய பயன்படும் பொருட்களை விற்பனை செய்தால், அவர்களின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மாஞ்சா நூலில் தயார் செய்யப்பட்ட காற்றாடிகள் பறக்க விடப்படுவதாக தகவல்கள் வந்துள்ளது. இதுபோன்ற செயல்களினால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் கழுத்தில் கண்ணாடி துகள்களால் தயார் செய்யப்பட்ட மாஞ்சா நூல் சிக்கி படுகாயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
மீறி யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீதும், 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றால் சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர். மேலும் கடைகளில் யாரேனும் மாஞ்சா நூல் மற்றும் மாஞ்சா நூல் தயார் செய்ய பயன்படும் பொருட்களை விற்பனை செய்தால், அவர்களின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X