search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையத்து, அவருக்கு நாளை கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டது. இது கொரோனாவுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கருதுவதால், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார். நேற்று பிற்பகல் தனது நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளை ரத்து செய்தார்.

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. பரிசோதனை முடிவு வந்தபிறகே, அவர் தனது வழக்கமான சந்திப்புகளை மேற்கொள்வார்.

    டெல்லியில் இதுவரை 28 ஆயிரத்து 936 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 812 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×