search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ராணிப்பேட்டையில் மணல் கடத்திய 2 பேர் கைது

    ராணிப்பேட்டையில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    சென்னை, சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 21), ராணிப்பேட்டை பிஞ்சி நடுத்தெருவை சேர்ந்த கணேஷ்ராஜ் (23) இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை பாலாற்றில் இருந்து பிளாஸ்டிக் பைகளில் மணல் கடத்தி கொண்டு வந்துள்ளனர்.

    சங்கர் நகர் அருகே வந்தபோது ரோந்து பணியில் இருந்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×