search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் தற்கொலை
    X
    பெண் தற்கொலை

    தர்மபுரி அருகே பெண் தற்கொலை

    தர்மபுரி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் தொப்பூரை சேர்ந்தவர் வெள்ளத்துரை. லாரி டிரைவர். இவருடைய மனைவி மோகனப்பிரியா (வயது 27). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வெள்ளத்துரை வேலைக்கு சரியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் வெள்ளத்துரை குழந்தைகளுடன் கடைக்கு சென்றிருந்த நேரத்தில் மோகனப்பிரியா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பெண் தற்கொலை சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×