search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X
    விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    துறையூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    துறையூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக செயலாளர் முத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    துறையூர்:

    துறையூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக செயலாளர் முத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்து ராஜ் தொடங்கி வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு ரூ. 7500 நிவாரணமாக வழங்க வேண்டும் , ரே‌ஷன் கடைகள் மூலம் 50 கிலோ அரிசி, சர்க்கரை,பருப்பு, சமையல் எண்ணை உள்ளிட்ட மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் உப்பி லியபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முத்துகுமார், துறையூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×