என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டன்சத்திரம் அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை
Byமாலை மலர்4 Jun 2020 8:58 AM GMT (Updated: 4 Jun 2020 8:58 AM GMT)
ஒட்டன்சத்திரம் அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தும்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் கேரளாவில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (32). இவர்களுக்கு அருந்ததி (6) என்ற மகளும், 11 மாதத்தில் அருள் அமுதன் என்ற ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். ஊரடங்கு காரணமாக சரவணன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன் வெளியூர் சென்றார். பின்னர் நேற்று காலையில் அவர் வீடு திரும்பினார். வீட்டின் கதவை தட்டி பார்த்தபோது திறக்கப்படவில்லை. உடனே கதவை உடைத்து சரவணன் உள்ளே சென்றார். அங்கு படுக்கை அறையில் கவிதா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
குழந்தை அருந்ததி அதே அறையில் தூங்கி கொண்டிருந்தாள். சமையல் அறையில் உள்ள வாளியில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் குழந்தை அருள்அமுதன் இறந்து கிடந்தான். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசாருக்கு சரவணன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிதா மற்றும் குழந்தை உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவிதா எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்? குழந்தையை கொலை செய்தது எதற்கு? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தும்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் கேரளாவில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (32). இவர்களுக்கு அருந்ததி (6) என்ற மகளும், 11 மாதத்தில் அருள் அமுதன் என்ற ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். ஊரடங்கு காரணமாக சரவணன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன் வெளியூர் சென்றார். பின்னர் நேற்று காலையில் அவர் வீடு திரும்பினார். வீட்டின் கதவை தட்டி பார்த்தபோது திறக்கப்படவில்லை. உடனே கதவை உடைத்து சரவணன் உள்ளே சென்றார். அங்கு படுக்கை அறையில் கவிதா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
குழந்தை அருந்ததி அதே அறையில் தூங்கி கொண்டிருந்தாள். சமையல் அறையில் உள்ள வாளியில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் குழந்தை அருள்அமுதன் இறந்து கிடந்தான். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசாருக்கு சரவணன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிதா மற்றும் குழந்தை உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவிதா எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்? குழந்தையை கொலை செய்தது எதற்கு? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X