என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் கல்லூரி மாணவி தற்கொலை
Byமாலை மலர்3 Jun 2020 8:11 AM GMT (Updated: 3 Jun 2020 8:11 AM GMT)
திருப்பூரில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த தேவராயம் பாளையம் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவருடைய மகள் நவ்சீன் (வயது 20). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
தற்போது கல்லூரிக்கு விடுமுறை என்பதால் நவ்சீன் வீட்டிலேயே இருந்தார். சம்பவத்தன்று அவரது அறை வெகு நேரமாக திறக்கப் படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கதவை தட்டினர். ஆனால் அறையில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. மேலும் கதவும் திறக்கப்படவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது நவ்சீன் அறையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் சம்பவம் குறித்து திருமுருகன்பூண்டி போலீசுக்கு புகார் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நவ்சீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X