search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருப்பூரில் கல்லூரி மாணவி தற்கொலை

    திருப்பூரில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த தேவராயம் பாளையம் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவருடைய மகள் நவ்சீன் (வயது 20). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தற்போது கல்லூரிக்கு விடுமுறை என்பதால் நவ்சீன் வீட்டிலேயே இருந்தார். சம்பவத்தன்று அவரது அறை வெகு நேரமாக திறக்கப் படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கதவை தட்டினர். ஆனால் அறையில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. மேலும் கதவும் திறக்கப்படவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது நவ்சீன் அறையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் சம்பவம் குறித்து திருமுருகன்பூண்டி போலீசுக்கு புகார் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நவ்சீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×