search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பை சந்தித்த நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு லாரி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். இதனால் அம்மாவட்டம் கொரோனா தொற்றுக்கு முதல் உயிரிழப்பை சந்தித்துள்ளது.
    நாமக்கல்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 11,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 154-ஆக உள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13,362 ஆக அதிகரித்துள்ளது. 6,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 113-ஆக உள்ளது.

    இந்நிலையில் கொரோனாவுக்கு நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    திருச்செங்கோடு அருகே கூட்டப்பள்ளி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். அவர் ஆந்திராவுக்கு லாரியில் சரக்குகளை ஏற்றிச்சென்று வீடு திரும்பிய நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
    Next Story
    ×