search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    பாளையங்கோட்டை அருகே மாணவியிடம் நகை பறிப்பு

    பாளையங்கோட்டை அருகே மாணவியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    பாளையங்கோட்டை குருபரம்பரை தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் முத்து மோனிகா (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்துவிட்டு, பிளஸ்-2 படிக்க தயாராகி வந்தார். இந்த நிலையில் நேற்று முத்து மோனிகா ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், அரிவாளை காட்டி மிரட்டி முத்து மோனிகா கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×