search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கிருஷ்ணகிரி அருகே மது குடிப்பதை கண்டித்ததால் கட்டிட மேஸ்திரி தற்கொலை

    கிருஷ்ணகிரி அருகே மது குடிப்பதை கண்டித்ததால் கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள பூந்தோட்டத்தை சேர்ந்தவர் கோபி (வயது 44). கட்டிட மேஸ்திரி. இவர் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

    இதை குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த கோபி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×