search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜவாஹிருல்லா
    X
    ஜவாஹிருல்லா

    தமிழக மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜவாஹிருல்லா

    ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களிலிருந்து மீன்பிடித் தொழிலுக்காக 734 மீனவர்கள் ஈரான் நாட்டு கடற்பகுதிக்கு சென்றுள்ளனர். கொரோனா தொற்றால் அந்நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் சிக்கி பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 3 மாதங்களாக அவர்களுக்கு சரியான உணவும் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை உடனடியாக மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.
    Next Story
    ×