search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனிதநேய மக்கள் கட்சி"

    • ரம்ஜான் பண்டிகை அரசு அறிவித்து உள்ள ஏப்ரல் 11-ந்தேதி அன்றோ அல்லது ஒருநாள் முன்போ பின்போ கொண்டாடப்பட வாய்ப்புள்ளது.
    • ஏப்ரல் 10, 12 தேதிகளில் நடைபெற உள்ள தேர்வுகளை வேறொரு நாட்களில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏப்ரல், 10-ந்தேதி அறிவியல் தேர்வும், 12-ந் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    11-ந்தேதி ஈகைப் பெரு நாள்(ரம்ஜான்) விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதால் அன்று மட்டும் தேர்வுகளை நடத்தாமல் அதற்கு முந்தைய தினமும் பிந்தைய தினமும் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் பெருநாட்கள் இரண்டும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை அரசு அறிவித்து உள்ள ஏப்ரல் 11-ந்தேதி அன்றோ அல்லது ஒருநாள் முன்போ பின்போ கொண்டாடப்பட வாய்ப்புள்ளது.

    நமது நாட்டில் பெரும்பாலும் வட பகுதியில் ஒருநாளும், தென்பகுதியில் மற்றொரு நாளும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் சூழலில் ஏப்ரல் 10-ந்தேதி அன்றும் 12-ந் தேதி அன்றும் தேர்வுகளை எழுதுவது என்பது முஸ்லிம் மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தும்.

    எனவே ஏப்ரல் 10, 12 தேதிகளில் நடைபெற உள்ள தேர்வுகளை வேறொரு நாட்களில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எந்த மக்களவை தொகுதி ஒதுக்கினாலும் அதிலும் போட்டியிட தயாராக உள்ளோம்.
    • இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - மனிதநேய மக்கள் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவுடன் ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா கூறியதாவது:-

    * 2013-ம் ஆண்டு முதல் தி.மு.க. கூட்டணியில் பணியாற்றி வருகிறோம்.

    * வரும் பாராளுமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

    * எந்த மக்களவை தொகுதி ஒதுக்கினாலும் அதிலும் போட்டியிட தயாராக உள்ளோம்.

    * இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என்றார்.

    முன்னதாக, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சிகள் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • இந்தியா கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ் கட்சி மேலும் முயற்சி செய்ய வேண்டும்.
    • தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது.

    கோவை:

    கோவை குனியமுத்தூரில் மனிதநேய மக்கள் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்தது.

    பின்னர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி சார்பில் பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் கூட்டங்களை நடத்தி பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர்.

    இந்தியா கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ் கட்சி மேலும் முயற்சி செய்ய வேண்டும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    2019 பாராளுமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்தது. ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை. வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடக் கூடிய வாய்ப்பை தரக்கோரி தி.மு.க.விடம் கோரிக்கை வைக்க நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

    நீண்ட காலமாக ஜெயிலில் உள்ள 49 பேரில் 20 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு தமிழக அரசு கடந்த ஆகஸ்டு 24-ந் தேதியே பரிந்துரைத்தது. ஆனால் 3 மாதங்களை கடந்தும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையே கவர்னர் மீது தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இதன் முதல்கட்ட விசாரணையின் போது சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள், கவர்னர்களுக்கு பல்வேறு செய்திகளை எடுத்துரைத்திருக்கிறார்கள். தி.மு.க. அரசு சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு வகையான நன்மைகள் செய்வதை தொடர்ந்து பார்த்து வருகிறோம். தொடர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    வழிபாட்டு தலங்களை பாதுகாக்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் டிசம்பர் 6-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மனிதநேய மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் தொடர் பிரச்சாரம் மற்றும் கழக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
    • பிரச்சாரத்தில் மாவட்ட தலைவர், செயலாளர், ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மனிதநேய மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் தொடர் பிரச்சாரம் மற்றும் கழக கொடியேற்றுதல் நிகழ்ச்சி பொன்னேரி நகர தலைவர் ஹபீஸுர் ரஹமான் தலைமையில் நடைப்பெற்றது.

    பொன்னேரி மசூதி தெரு புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் குணங்குடி மொய்தீன், மாவட்டத் தலைவர் அப்துல் காதர், முன்னாள் மாவட்ட தலைவர் உசேன் அலி, மாவட்ட செயலாளர் யூசுப் அலி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய அரசு ஒருவேளை உதவித் தொகையை வழங்க மறுத்துவிட்டால் தமிழ்நாடு அரசு வழங்கும் என முதலமைச்சர் அறிவிப்பு.
    • கிறிஸ்துமஸ் பெருவிழாவில் இனிப்பான அறிவிப்பை வழங்கியமைக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இதயம் கனிந்த நன்றிகள்.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒன்றிய அரசு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்ற மாணவர்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்திலிருந்து வழங்கி வந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் கல்வி உதவித் தொகையை திடீரென்று இந்த ஆண்டில் இருந்து நிறுத்துவதாக அறிவித்தது.

    இந்நிலையில் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துவிட்ட உதவித் தொகையை உடனே மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஒன்றிய அரசு ஒருவேளை இந்த உதவித் தொகையை வழங்க மறுத்துவிட்டால் தமிழ்நாடு அரசு வழங்கும் என்று கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்திய அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் ஆற்றிய உரையின் போது இனிப்பான அறிவிப்பை வழங்கியமைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதயம் கனிந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயங்கரவாதம் எந்த மூலையிலிருந்து, எந்த முகாமிலிருந்து முளை விட்டாலும் அதை ஆரம்ப நிலையிலேயே அடியோடு கிள்ளி எறிந்திட வேண்டும்.
    • தமிழகத்தின் அமைதிக்கும் நல்லாட்சிக்கும் ஊறுவிளைவிக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காவல் சோதனை சாவடி முன்பு ஒரு மாருதி ஆம்னி வாகனத்தில் கேஸ் உருளை வெடித்துச் சிதறி, வாகனம் இரண்டு துண்டாகியுள்ளது.

    காரை ஓட்டிச்சென்றவர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்துள்ளார். அவரது பெயர் ஜமேசா முபீன் என அறியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குகள் ஏதும் இல்லை. எனினும் அவர் வீட்டில் வெடிபொருட்கள் இருந்ததாகவும், முன்பு அவரை என்ஐஏ விசாரித்திருப்பதாகவும் காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு சம்பவ இடத்தில் நடந்த ஆய்வுக்குப் பிறகு தெரிவித்துள்ளார்.

    இது மிகுந்த வேதனைக்குரிய சம்பவமாகும். இச்சம்பவம் தற்செயலான விபத்தாகவே இருந்திட வேண்டும் என விழைகிறோம். அதேநேரம், இதன் பின்னணியில் ஏதேனும் பயங்கரவாத விஷமச் செயல்கள் இருக்குமாயின் அது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். இதன் பின்னணியில் இருப்போர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு ஓர் உயர்ந்த உதாரணமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. பல்வேறு மதங்களைப் பின்பற்றுவோர் இங்கே ஒருதாய் பிள்ளைகளாய் தொப்புள்கொடி உறவுகளாய் பிணைந்து இணைந்து வாழ்ந்து வருகிறோம்.

    இந்நிலையைச் சீர்குலைக்கும் எந்த சூழ்ச்சிக்கும் இங்கு இடங்கொடுத்து விடக்கூடாது.

    பயங்கரவாதம் எந்த மூலையிலிருந்து, எந்த முகாமிலிருந்து முளை விட்டாலும் அதை ஆரம்ப நிலையிலேயே அடியோடு கிள்ளி எறிந்திட வேண்டும்.

    தமிழகத்தின் அமைதிக்கும் நல்லாட்சிக்கும் ஊறுவிளைவிக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    பொதுமக்கள் வதந்திகளுக்கோ விஷமிகளின் தூண்டலுக்கோ இடங்கொடுத்து விடாமல், சமூக அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாத்திட ஓரணியில் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நின்றிட வேண்டும் என்றும் அன்போடு வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மனித நேய மக்கள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
    • இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதி காக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் மனித நேய மக்கள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் கட்சியின் மாநில பொருளாளர் உமர் ஹாஜியார் கொடியேற்றி வைத்தார்.விழாவில் தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்சமது கலந்துகொண்டு பேசியதாவது:-

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயண யாத்திரையை மனித நேய மக்கள் கட்சி பாராட்டுகிறது. இந்தியாவின் பன்முக தன்மை, மதசார்பின்மை கொள்கைக்கு கடும் அச்சுறுத்தல் நிலவும் இந்த வேளையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்பது மிகவும் அவசியமானது .அவரது நடைப்பயண யாத்திரை மகத்தான வெற்றியை பெற வேண்டும். ராகுல்காந்தி ஆட்சிக்கு வரும் போது இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதி காக்க வேண்டும். 3சதவீதம் உள்ளவர்கள் 50 சதவீதம் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் இடம் பிடித்துள்ளனர். நாட்டில் பிற்பட்டோருக்கும், மிகவும் பிற்பட்டோருக்குமான சமூக நீதி வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை அவர் அளிக்க வேண்டும். அதே போல் நீதிபதிகள் ரங்கநாதமிஸ்ரா, சச்சார் ஆகியோர் வழங்கிய அறிக்கையை அமல்படுத்த வேண்டும்.

    இந்தியா என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல .அது மதம், மொழி,இனம்,பண்பாடு, கலாச்சாரம் என பலவற்றாலும் பலருக்குமான பன்முகதன்மை கொண்ட நாடு ஆகும். உலகில் மதசார்பின்மை கொள்கை கொண்ட நாடு ஆகும். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைச்சாலைகளில் இருக்கும் நோயாளிகள் மற்றும் வயது முதிர்ந்த இஸ்லாமியர்களை வழக்கிலிருந்து விடுவித்து சிறையில் இருந்து விடுதலை செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் முஜிபுர்ரகுமான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×