search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "walk"

    • வருகிற 26-ந்தேதி திருவையாறில் தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.
    • பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கை கொடுத்து நடைபயணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

    அந்த வகையில் வருகிற 26ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருவையாறில் தனது நடை பயணத்தை தொடங்குகிறார். அன்றைய தினம் மாலையில் தஞ்சாவூரில் நடைப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கிறார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இந்நிலையில் அண்ணாமலை நடைபயணத்தை முன்னிட்டு தஞ்சை மேற்கு மாநகரப் பகுதி நிர்மலா நகரில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் பத்திரிக்கை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேற்கு மாநகருக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கை கொடுத்து நடை பயணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மருத்துவ பிரிவு மாநில செயலாளர் டாக்டர் பாரதிமோகன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் பாலசெல்வம், மாவட்ட பொதுச்செயலாளர் முரளிதரன், மாவட்ட பொருளாளர் விநாயகம், வடக்கு மாநகர தலைவர் பாலமுருகன், மேற்கு மாநகர தலைவர் வெங்கடேசன், மேற்கு மாநகர பொதுச்செயலாளர் மாயக்கண்ணன், துணைத் தலைவர் அலமேலு மெடிக்கல் சண்முகம், செயலாளர் சசி, மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்தி கேந்திரம் பொறுப்பாளரும் தொழில் பிரிவு மாநில செயலாளருமான ரங்கராஜன் செய்திருந்தார்.

    • தேயிலை தோட்ட பாறையில் அமர்ந்து ஒய்வெடுத்த சிறுத்தை
    • ரெயில் தண்டவாளத்தை தாண்டி, பஸ் நிலையம் வந்த காட்டெருமை

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சிங்காரா பகுதியில் ஒரு சிறுத்தை வலம் வந்தது.

    அது நேற்று மாலை தேயிலை தோட்டத்தில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்தது. இதனை அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்த்து அச்சம் அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்த சிறுத்தை பின்னர் தாமாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

    இதற்கிடையே குன்னூர் ரயில் நிலையத்தில் ஒற்றை காட்டெருமை உலாவந்தது. இது தீடிரென அங்குள்ள தண்டவாளத்தை தாண்டி, பஸ் நிலையம் வந்து, பின்னர் மவுண்ட் ரோடு சாலை வழியாக ஆந்த பகுதிகளில் சுற்றி திரிந்தது. காட்டெருமை முக்கிய சாலையில் சென்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    குன்னூரில் பலத்த மழை காரணமாக மேகமூட்டமும் அதிகளவில் இருந்ததால், எதிரேவரும் காட்டெருமையை வாகன ஓட்டிகளால் சரிவர பார்க்க இயலவில்லை. அப்போது அது வாகனங்களை தாக்க முயன்றது. இதில் ஒரு சிலர் மயிரிழையில் உயிர்தபினர். பின்னர் அந்த காட்டெருமை ஒருவழியாக அருகே உள்ள வண்ணாரப்பேட்டை வனத்திற்குள் சென்று மறைந்தது.

    குன்னூரில் காட்டெருமை உலா காரணமாக மவுண்ட் ரோடு பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. எனவே நகரப்பகுதிகளுக்கு வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பேரணியை தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பொது இடங்களில் குப்பையை கொட்டி அசுத்தம் செய்ய மாட்டோம் என தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    இன்று உலக கழிப்பறை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 587 ஊராட்சிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன்படி குளிச்சப்பட்டு கிராமத்தில் பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்ட தூய்மை நடை பயண விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குளிச்சப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி தலைமை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், வட்டார வளர்ச்சி மண்டல துணை அலுவலர் சித்ரா, பணி மேற்பார்வையாளர் புவனேஸ்வரி, கிராம அலுவலர் கோவிந்தராஜ், ஊராட்சி செயலாளர் சசிகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம், 3-வது வார்டு உறுப்பினர் குருமூர்த்தி உமாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அனைவரும் திறந்த வெளியில் மலம் கழிப்பதில்லை, நெகிழி பொருட்களை பய ன்படுத்துவதில்லை, பொது இடங்களில் குப்பையை கொட்டி அசுத்தம் செய்ய மாட்டோம் என தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    பேரணியில் பள்ளி மாணவ-மாணவியர், கிராம மக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை சுமந்து வீதி வீதியாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வனிதா நடராஜன் நன்றி கூறினார்.

    • தேசிய நெடுஞ்சாலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபயணம் நடைபெற்றது.
    • சில பெரிய அளவிலான விபத்துக்கள் மட்டுமே வெளியே தெரிய வருகிறது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள கொங்கு தனியார் மண்டபத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபயணம் நடைபெற்றது. சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை முழுமையான4 வழி சாலையாக மாற்றக் கூறி நடை பயணம் சின்ன சேலத்தில் நடந்தது.  சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் 37 கிலோமீட்டர் நீளம் உள்ள 9 இடங்களில் இரு வழிச்சாலையாக உள்ளது.

    இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்லும் கனரக இலகு ரக மற்றும் இருசக்கர வாகனங்கள் நான்கு வழி சாலைகளில் பயணித்துவிட்டு திடீரென அகலம் குறுகிய இருவழி சாலைக்கு மாறும் பொழுது வாகனங்கள் அதிக அளவில் விபத்துகளில் சிக்குகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.அவற்றில் ஒரு சில பெரிய அளவிலான விபத்துக்கள் மட்டுமே வெளியே தெரிய வருகிறது. மேலும் பல சிறு விபத்துகள் வெளியே தெரிவதில்லை எனவே தமிழக அரசும் ஒன்றிய அரசும் போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை முழுவதுமாக நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கையை முன்னிறுத்தி நடை பயணம் நடைபெற்றது.

    • மனித நேய மக்கள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
    • இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதி காக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் மனித நேய மக்கள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் கட்சியின் மாநில பொருளாளர் உமர் ஹாஜியார் கொடியேற்றி வைத்தார்.விழாவில் தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்சமது கலந்துகொண்டு பேசியதாவது:-

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயண யாத்திரையை மனித நேய மக்கள் கட்சி பாராட்டுகிறது. இந்தியாவின் பன்முக தன்மை, மதசார்பின்மை கொள்கைக்கு கடும் அச்சுறுத்தல் நிலவும் இந்த வேளையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்பது மிகவும் அவசியமானது .அவரது நடைப்பயண யாத்திரை மகத்தான வெற்றியை பெற வேண்டும். ராகுல்காந்தி ஆட்சிக்கு வரும் போது இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதி காக்க வேண்டும். 3சதவீதம் உள்ளவர்கள் 50 சதவீதம் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் இடம் பிடித்துள்ளனர். நாட்டில் பிற்பட்டோருக்கும், மிகவும் பிற்பட்டோருக்குமான சமூக நீதி வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை அவர் அளிக்க வேண்டும். அதே போல் நீதிபதிகள் ரங்கநாதமிஸ்ரா, சச்சார் ஆகியோர் வழங்கிய அறிக்கையை அமல்படுத்த வேண்டும்.

    இந்தியா என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல .அது மதம், மொழி,இனம்,பண்பாடு, கலாச்சாரம் என பலவற்றாலும் பலருக்குமான பன்முகதன்மை கொண்ட நாடு ஆகும். உலகில் மதசார்பின்மை கொள்கை கொண்ட நாடு ஆகும். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைச்சாலைகளில் இருக்கும் நோயாளிகள் மற்றும் வயது முதிர்ந்த இஸ்லாமியர்களை வழக்கிலிருந்து விடுவித்து சிறையில் இருந்து விடுதலை செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் முஜிபுர்ரகுமான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தாய்பால் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.
    • ரோட்டரி சங்கத்தின் சார்பில் பரிசு வழங்கி ஆலோசனை வழங்கினர்.

    கீழக்கரை

    கீழக்கரையில் ரோட்டரி சங்கம், செய்யது ஹமீதா கல்லூரி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு பிரசார நடைபயணம் நடந்தது.

    கீழக்கரை போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய நடைபயணம் முக்கிய சாலைகள் வழியாக சென்று கடற்கரை சந்திப்பில் முடிவடைந்தது.இந்த ஊர்வலத்தில் தாய்ப்பாலின் அவசியத்தையும், நன்மையையும் மாணவிகள் கோஷமிட்டு வெளிப்படுத்தினர்.

    கீழக்கரை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா ரோட்டரி சங்க தலைவர் கபீர் தலைமையில் தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹூசைன் முன்னிலையில் நடந்தது. இதில் புதிதாக குழந்தை பெற்ற பெண்கள், கருவுற்று ஆலோசனைகள் பெற வந்த பெண்கள் 20 பேருக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் பரிசு வழங்கி ஆலோசனை வழங்கினர்.

    இந்த நிகழ்வுகளில் அரசுமருத்துவமனை மருத்துவர்கள், இந்திய செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், செய்யது ஹமீதா கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×