search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி
    X

    பொன்னேரியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி

    • மனிதநேய மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் தொடர் பிரச்சாரம் மற்றும் கழக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
    • பிரச்சாரத்தில் மாவட்ட தலைவர், செயலாளர், ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மனிதநேய மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் தொடர் பிரச்சாரம் மற்றும் கழக கொடியேற்றுதல் நிகழ்ச்சி பொன்னேரி நகர தலைவர் ஹபீஸுர் ரஹமான் தலைமையில் நடைப்பெற்றது.

    பொன்னேரி மசூதி தெரு புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் குணங்குடி மொய்தீன், மாவட்டத் தலைவர் அப்துல் காதர், முன்னாள் மாவட்ட தலைவர் உசேன் அலி, மாவட்ட செயலாளர் யூசுப் அலி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×