search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சேலம் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

    சேலம் அருகே வீடு புகுந்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி பொடாரங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி சாந்தி (வயது 32). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளிப்புற பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் நைசாக புகுந்து திருடினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் அந்த நபரை பிடித்தார்.

    பின்னர் அந்த நபர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் செல்லக்குட்டி கரடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.600 மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×