search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு திருட்டு"

    • நகை பறிமுதல் செய்யப்பட்டது.
    • கைது செய்யப்பட்ட பாபு விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    சென்னை, அயனாவரம், கே.எச்.ரோட்டை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி அமராவதி (88) வீட்டில் மதியம் தூங்கிக் கொண்டிருந்தபோது முகமூடி அணிந்து வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் அவர் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.

    இது குறித்து அமராவதி அயனாவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அரும்பாக்கம் ஜெய்நகரை சேர்ந்த பாபு (35) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 8 பவுன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. பாபு இதேபோல் அரும்பாக்கம் பகுதிகளில் 2 மூதாட்டிகளிடம் தங்க நகைகளை திருடிய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பாபு விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    ×