search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    சிங்காரப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலி

    சிங்காரப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    சிங்காரப்பேட்டை அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 32). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் சிங்காரப்பேட்டை-திருவண்ணாமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×