search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்திக்குத்து
    X
    கத்திக்குத்து

    அவனியாபுரத்தில் பால் வியாபாரிக்கு சரமாரி கத்திக்குத்து- 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

    பால் வியாபாரியை 4 பேர் கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அவனியாபுரம்:

    அவனியாபுரம் துக்கா ராம் தெருவைச் சேர்ந்தவர் சீராளன். இவரது மகன் கருப்பசாமி (வயது 28), பால் வியாபாரி. இவர் நேற்று மாலை அந்த பகுதியில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது 4 பேர் கும்பல் அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்தது. அவர்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதனை கருப்பசாமி தட்டிக்கேட்டார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரம் அடைந்த 4 பேர் கும்பல் கத்தியால் கருப்பசாமியை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டது. பலத்த காயம் அடைந்த கருப்பசாமி சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×