என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவனியாபுரத்தில் பால் வியாபாரிக்கு சரமாரி கத்திக்குத்து- 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
Byமாலை மலர்19 May 2020 9:04 AM GMT (Updated: 19 May 2020 9:04 AM GMT)
பால் வியாபாரியை 4 பேர் கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அவனியாபுரம்:
அவனியாபுரம் துக்கா ராம் தெருவைச் சேர்ந்தவர் சீராளன். இவரது மகன் கருப்பசாமி (வயது 28), பால் வியாபாரி. இவர் நேற்று மாலை அந்த பகுதியில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது 4 பேர் கும்பல் அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்தது. அவர்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதனை கருப்பசாமி தட்டிக்கேட்டார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த 4 பேர் கும்பல் கத்தியால் கருப்பசாமியை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டது. பலத்த காயம் அடைந்த கருப்பசாமி சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X