search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சாராயம் கடத்திய வாலிபர் கைது

    பள்ளிப்பட்டு அருகே சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரி காலனி வழியாக ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு சாராயம் கடத்துவதாக பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் கன்னய்யன் மற்றும் போலீசார் நேற்று அந்த பகுதியில் திடீரென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் 30 லிட்டர் சாராயம் கடத்தியது தெரியவந்தது. போலீசார் மோட்டார் சைக்கிளுடன் சாராயத்தை கைப்பற்றினர்.

    சாராயத்தை கடத்தி வந்த பள்ளிப்பட்டு தாலுகா கீளப்பூடி காலனியை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பவரை கைது செய்து பள்ளிப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×