என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோயம்பேடு மார்க்கெட் மூலம் விழுப்புரத்தில் மேலும் 61 பேருக்கு நோய்த்தொற்று
Byமாலை மலர்7 May 2020 4:14 AM GMT (Updated: 7 May 2020 4:14 AM GMT)
கோயம்பேடு மார்க்கெட் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 50 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
கோயம்பேடு மார்க்கெட் மூலம் விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்டமாவட்டங்களில் கொரோனா தொற்று பரவி வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் தொற்று பரவுகிறது.
மார்க்கெட்டில் வேலை செய்து சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று கண்டறியப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து சென்றவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து கூலித் தொழிலாளர்கள் வசித்து வந்த 12 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதேபோல் சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சின்மயா நகர், வளசரவாக்கம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இன்று நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு அருகில் உள்ள பகுதிகளில் கொரோனா பரவுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X