என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லாமலே கொரோனா- ராதாகிருஷ்ணன்
Byமாலை மலர்4 May 2020 5:58 AM GMT (Updated: 4 May 2020 5:58 AM GMT)
பாதிப்பு கண்டறியப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லாமலே தொற்று உறுதியாகியுள்ளதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை:
சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் 200-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று கோயம்பேட்டில் ஆய்வு நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது பாதிப்பு கண்டறியப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லை. பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது. பரிசோதனையை அதிகரிப்பதால் பாதிப்பு அதிகமாக தெரியவருகிறது. கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை கண்டு மக்கள் அஞ்ச தேவையில்லை; ஆனால் அலட்சியமாகவும் இருக்கக்கூடாது.
பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் 200-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று கோயம்பேட்டில் ஆய்வு நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
கோயம்பேட்டில் அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது பாதிப்பு கண்டறியப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லை. பரிசோதனை மூலமே பாதிப்பு தெரியவந்துள்ளது. பரிசோதனையை அதிகரிப்பதால் பாதிப்பு அதிகமாக தெரியவருகிறது. கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை கண்டு மக்கள் அஞ்ச தேவையில்லை; ஆனால் அலட்சியமாகவும் இருக்கக்கூடாது.
பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X