search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழி
    X
    கனிமொழி

    முழு ஊரடங்கு- கனிமொழி எம்.பி. விமர்சனம்

    சென்னை, மதுரை, கோவை உள்பட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி விமர்சித்து உள்ளார்.
    சென்னை:

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, மதுரை, கோவை உள்பட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனை தி.மு.க. எம்.பி. கனிமொழி விமர்சித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    முதல்வர் அவர்களே, சில நாட்களுக்கு முன்பு முழு முடக்கத்துக்குள் ஒரு முடக்கத்தை அறிவித்து ஒட்டுமொத்த மக்களையும் வீதிக்கு கொண்டு வந்தீர்கள். இப்போது உங்கள் வாகனங்கள் செல்வதற்காக அத்தியாவசிய போக்குவரத்தையும், ஆம்புலன்ஸ்களையும் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள். அடடா! இதல்லவோ மக்கள் பணி.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×