search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீல் வைப்பு
    X
    சீல் வைப்பு

    சீவல், புகையிலை அதிக விலைக்கு விற்ற கடைக்கு சீல் வைப்பு

    பாபநாசத்தில் சீவல், புகையிலை அதிக விலைக்கு விற்ற கடைக்கு கும்பகோணம் ஆர்.டி.ஓ வீராசாமி முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
    பாபநாசம்:

    பாபநாசம் தாலுக்காவில் 144 தடை உத்தரவு காலத்தின்போது விற்பனை விலைக்கும் கூடுதலாக பொருட்களை விற்பதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் பாபநாசம் பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பாபநாசம் கடைவீதியில் திராவிடன் என்பவர் வெற்றிலைக் கடையில் விற்பனை விலைக்கும் கூடுதலாக சீவல், புகையிலை பொருட்களை விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கும்பகோணம் ஆர்.டி.ஓ வீராசாமி முன்னிலையில் கடைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. பாபநாசம் தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் நல்லசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×