search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குப்பன்
    X
    குப்பன்

    ஆரணி அருகே கொரோனா பாதுகாப்பு பணியில் இருந்த ஏட்டு திடீர் மரணம்

    ஆரணி அருகே கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஏட்டு திடீரென மரணம் அடைந்தார்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள பெரியகரம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் (57). களம்பூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.

    நேற்று இரவு களம்பூர் பகுதியில் உள்ள ஆரணி திருவண்ணாமலை சாலையில் ஆஞ்சிநேயர் கோவில் அருகில் கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சாலையில் சுருண்டு விழுந்தார். அருகில் இருந்த போலீசார் உடனடியாக 108 ஆம்பூலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்க அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே ஏட்டு குப்பன் இறந்தார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×