என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் கொரோனா வைரசை தடுக்கலாம்- அமைச்சர் உதயகுமார்
Byமாலை மலர்20 March 2020 7:44 AM GMT (Updated: 20 March 2020 7:44 AM GMT)
கைகளை சோப்பு போட்டு கழுவுதல், சுற்றுப்புறத்தை கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்து, சுய கட்டுப்பாட்டினை கடைப்பிடித்தாலே கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து விடலாம் என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம், தமிழகம்-ஆந்திரா எல்லையில் உள்ள பொன்பாடி சோதனைச் சாவடியில் எடுக்கப்பட்டு உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் உதயகுமார், பாண்டியராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் ஆந்திராவில் இருந்து வந்த வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
அப்போது அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநிலத்தில் உள்ள 86 சோதனை சாவடிகளில் மனிதர்களின் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, வெளிமாநில வாகனங்களில் கிருமி நாசினிகள் தெளித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவுதல், சுற்றுப்புறத்தை கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்து, சுய கட்டுப்பாட்டினை கடைப்பிடித்தாலே இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து விடலாம்.
மக்கள் பீதியோ எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை. பொதுமக்கள் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், தமிழகம்-ஆந்திரா எல்லையில் உள்ள பொன்பாடி சோதனைச் சாவடியில் எடுக்கப்பட்டு உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் உதயகுமார், பாண்டியராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் ஆந்திராவில் இருந்து வந்த வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
அப்போது அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநிலத்தில் உள்ள 86 சோதனை சாவடிகளில் மனிதர்களின் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, வெளிமாநில வாகனங்களில் கிருமி நாசினிகள் தெளித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 48,824 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் பயணம் செய்த 1,11,009 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 59,435 பள்ளிகள், 2319 கல்லூரிகள், 52,967 அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள், பார்கள், வணிக வளாகங்கள், 15,499 பேருந்துகள் மற்றும் ரெயில்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பீதியோ எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை. பொதுமக்கள் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X