என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
Byமாலை மலர்19 March 2020 7:06 AM GMT (Updated: 19 March 2020 7:06 AM GMT)
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் எனக்கோரிய மனுவை ஐகோர்ட் மதுரை கிளை இன்று தள்ளுபடி செய்தது.
மதுரை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளிகள், கல்லூரிகள், சுற்றுலா தலங்கள் ஆகியவை மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என அறிவித்தது.
இதற்கிடையே, மார்ச் 31-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என வலியுறுத்தி ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பினர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சென்னையில் இது போன்ற வழக்கு விசாரணையில் உள்ளது என்ற அரசுத்தரப்பின் வாதத்தை ஐகோர்ட் ஏற்றுக் கொண்டது. இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X