search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தர்மபுரியில் மதுவிற்ற 4 பேர் கைது

    தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுவிற்ற 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 70 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில், தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் கள்ளத்தனமாக மதுவிற்பவர்களை கைது செய்ய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தர்மபுரி டவுன் போலீசார் அதேபகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது55), மணி (49), மூர்த்தி (62) மற்றும் நடராஜன் (32) என்பவர்களை அரசுக்குப் புறம்பாக மது விற்றதன்பேரில் கைது செய்தனர். 

    மேலும் இவர்களிடம் இருந்து 70 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×