என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாடபுரத்தில் குழந்தை திருமணம் செய்து வைத்த 4 பேர் கைது
Byமாலை மலர்15 March 2020 2:58 PM GMT (Updated: 15 March 2020 2:58 PM GMT)
பெரம்பலூர் அருகே லாடபுரத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது25). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 5-ந் தேதி லாடபுரம் பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., விஜயலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது குழந்தை திருமணம் நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா வழக்குபதிந்து திருமண செய்து கொண்ட சிறுமி, சிறுமியின் தாய் செல்வி (45), அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பி சங்கர் (40) மற்றும் மணமகன் சுரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X