search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    லாடபுரத்தில் குழந்தை திருமணம் செய்து வைத்த 4 பேர் கைது

    பெரம்பலூர் அருகே லாடபுரத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது25). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 5-ந் தேதி லாடபுரம் பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., விஜயலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது குழந்தை திருமணம் நடந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா வழக்குபதிந்து திருமண செய்து கொண்ட சிறுமி, சிறுமியின் தாய் செல்வி (45), அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பி சங்கர் (40) மற்றும் மணமகன் சுரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×