search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை திருமணம்"

    • பாலக்கோடு அருகே சிறுமியை குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது பதியப்பட்டுள்ளது.
    • சமூக நல அலுவலர் புகாரின் பேரில் நடவடிக்கை.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள புலிக்கரை- சென்னம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் பாலக்கோடு தாலுகா மோதுகுல அள்ளி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் பூவரசன் என்ற வாலிபருக்கும் திருமணம் நடந்து இருப்பதாக பாலக்கோடு மகளிர் ஊர்நல அலுவலருக்கு வந்த புகாரின் பேரில் அவர் பாலக்கோடு் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், 17 வயதான சிறுமி 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், வாலிபர் பூவரசனை காதலித்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறி வாலிபர் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது வாலிபர் சிறுமிக்கு தாலி கட்டியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து குழந்தை திருமண சட்டத்தின்படி வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சாந்தி அமலோா் தலைமை வகித்தாா்
    • காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு உறுப்பினா் பிரசாந்த், தன்னாா்வலா் அமைப்பின் நிா்வாகி வசந்தி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

    காங்கயம்:

    குழந்தை திருமண ஒழிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி காங்கயத்தில் நடைபெற்றது.காங்கயம் காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சாந்தி அமலோா் தலைமை வகித்தாா்.இதில் பெண் குழந்தைகளுக்கு 18 வயது பூா்த்தியாகும் முன்பே திருமணம் செய்யக்கூடாது.குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதோடு, அவா்களின் பள்ளிக் கல்வி தொடா்வதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டன.இதைத்தொ டா்ந்து, மாணவிகள், ஆசிரியா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள், ஆசிரியா்கள், காங்கயம் வட்ட சட்டப் பணிகள் குழு உறுப்பினா் பிரசாந்த், தன்னாா்வலா் அமைப்பின் நிா்வாகி வசந்தி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

    • செய்யது ஹமீதா கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • குழந்தை திருமணங்களுக்கு வறுமை, கல்வியறிவின்மையே காரணமாகும் என வட்டார மருத்துவ அலுவலர் பேசினார்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவி யல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக சிறுவயது திருமணங்களால் ஏற்படும் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கூட்டரங்கில் நடத் தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனை வர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.

    இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக திருப்புல் லாணி வட்டார மருத்துவர் ராசிக்தீன் மற்றும் வேளா னுர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அம்பிகா ஆகியோர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், குழந்தை திருமணம் பழங்கா லத்திலிருந்தே நடைமுறை யில் இன்றும் சில மாநிலங்க ளில் இளம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அவர் களின் உடல் மற்றும் மன முதிர்ச்சிக்கு முன்பே திரும ணம் செய்து வைக்கப்படுகி றார்கள்.

    குழந்தைத் திருமணங்க ளுக்கான காரணங்கள் வறுமை, வரதட்சணை, கலாச்சார மரபுகள், மத மற்றும் சமூக அழுத்தங்கள், கல்வியறிவின்மை ஆகிய வையாகும். குழந்தைத் திரும ணத்தை முடிவுக்குக் கொண்டு வர, இந்தப் பிரச்சினையை பற்றிய விழிப்புணர்வை நாம் அனைவரிடையே ஏற்படுத்த வேண்டும்.

    ஒரு குறிப்பிட்ட சிறு வயது திருமணத்தால் சிறுமி யர்களுக்கு கல்வியும், பொருத்தமான வேலை வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. சிறு வயதிலேயே முழு உடல் வளர்ச்சி பெறாத நிலையில், பெண்ணுக்கு நடைபெறும் திருமணத்தினால் தாயும், சேயும் மகப்பேறின் போது இறக்கும் சதவிகிதம் மிக அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற் கான ஏற்பாடுகளை கல்லூ ரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சுலை மான் சதாம் உசேன் மற்றும் முனிய சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • குழந்தை திருமணம் அதிகரித்து வருகிறது.
    • வாகன பிரச்சாரம், துண்டு பிரசுரம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் இளம் வயது பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதும் அதனால் இளம் வயதி லேயே குழந்தை பெறுவதும் தொடர் கதையாகி வருகிறது.

    பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியடைந்த பின்னர் தான் திருமணம் நடத்த வேண்டும் என்பது சட்டம். பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்த சட்டம் இயற்ற வேண்டும் என்று மசோதா மத்திய அரசின் சட்ட ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

    உலகில் குழந்தைத் திருமணம் செய்யப்படும் மூன்று சிறுமிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இந்தியாவில் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்படும் சிறுமிகளில் பெரும்பாலும், உத்தர பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியபிரதேச மாநி லங்களை சேர்ந்தவர்கள்.

    குழந்தைத் திருமணம் செய்துகொண்ட 3.6 கோடி பெண்கள் உத்தரப்பி ரதேசத்தில் இருப்பதாக யுனிசெப் வெளியிட்ட ஆய்வறிக்கை தரும் புள்ளிவிவரங்கள் இதன் உண்மைத்தன்மையை உணர்த்துவதாக உள்ளது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதி களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் திருமணமான டீன் ஏஜ் பெண்கள் பிரசவத்திற்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதே போல் மாவட்ட த்தில் அதிகாரிகளுக்கு தெரியாமல் 18 வயதுக்குட் பட்ட பெண்களுக்கும் திரு மணம் நடத்துவது அதிக ரித்துள்ளது. குறிப்பாக கிராம புறங்களில் குழந்ைத திருமணங்கள் அதிக ரித்துள்ளன.

    சமீபத்திய ஆய்வில் ஊரக மற்றும் நகர்ப்பு றங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3338 டீன் ஏஜ் பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக பதிவாகியுள்ளது. மேலும் அரசு தாலுகா மருத்துவ மனை, அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவ மனை களில் நடக்கும் டீன் ஏஜ் பிரசவங்களை கணக் கிட்டால் அதன் புள்ளி விவரங்கள் இன்னும் அதிகரிக்கும்.

    குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது மக்கள், மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பிரச்சாரம், துண்டு பிரசுரம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • போலீசார் கடும் எச்சரிக்கை
    • ஆவணங்களை கட்டாயமாக சரிபார்க்க வேண்டும்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தனியார் திருமண மண்டபத்தின் உரிமையாளர்களுக்கு குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுப்பதோடு அதனை குறைப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி திருமணம் நடத்த மண்டபதிற்கு வரும் பெற்றோர்களிடம் மணப்பெண்ணிற்கு 18-வயது பூர்த்தி அடைந்துள்ளதா என்பதை கேட்டறிய வேண்டும்.

    மேலும் மண்டப உரிமையாளர்களாகிய நீங்கள் பெண்ணின் வயதை உறுதி செய்ய கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயமாக சரிபார்க்க வேண்டும்.

    அவ்வாறு சரிபார்க்காமல் குழந்தை திருமணம் ஏதாவது நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே நீங்களும் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மண்டப உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • வேர்ல்டு விஷன் திட்ட அலுவலர் சந்திர எபினேசர் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

    தொண்டி

    தொண்டி அருகே எஸ்.பி.பட்டிணத்தில் குழந்தைப் பாதுகாப்பு அலகு, காவல்துறை மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா இணைந்து குழந்தை திருமணம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியது. இதற்கான பிரசார வாகனத்தை திருவாடானை டி.எஸ்.பி. நிரேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பிரசாரமானது மாவட்ட எல்லையான எஸ்.பி.பட்டிணத்தில் தொடங்கி காரங்காடு வரையிலான 14 பஞ்சாயத்திலுள்ள 64 கிராமங்களுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும், கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் டி.சி.பி.யூ சமூகப்பணியாளர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர். வேர்ல்டு விஷன் திட்ட அலுவலர் சந்திர எபினேசர் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • சிறைதண்டனை 1 லட்சம் ரூபாய் அபராதம்
    • தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும்

    பெரம்பலூர்,

    நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது பெண் கல்வி. பெண் கல்விக்கு தடையாக இருப்பது குழந்தை திருமணம். குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள், குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் ஆகிய அனைவருக்கும் குழந்தை திருமண தடைச்சட்டம் 2006 பிரிவு 11-ன்படி, 2 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையோ அல்லது ரூ.1 லட்சம் வரையிலான அபராதமோ தண்டனையாக விதிக்கப்படும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிந்தால் சைல்டு லைனை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட சமூக நல அலுவலரை 9944350988 என்ற செல்போன் எண்ணிலும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலரை 8668092093 என்ற செல்போன் எண்ணிலும், மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரை 9443391931 என்ற செல்போன் எண்ணிலும், குழந்தை நலக்குழுவை 6369018347 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறுமியின் வயதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • திருமணம் செய்து வைத்தது தொடர்பாக தந்தை, கணவர் மாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பாரபட்டி அருகேயுள்ள எருமையாம்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது 15 வயது மகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு எச்.புதுபட்டியை சேர்ந்த கலைஞன் (வயது 25) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    கர்ப்பிணியான அந்த சிறுமி பிரசவத்துக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமியின் வயதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அரூர் அனைத்து மகளிர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது.

    அதன்பேரில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக அவரது தந்தை சின்னசாமி, கணவர் கலைஞன், மாமியார் காந்தா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குழந்தை திருமணம் ஒரு குற்றம்.
    • மக்களும் அரசோடு இணைய வேண்டும்

    புதுடெல்லி :

    2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி. இவர் குழந்தைகள் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சார்பில் குழந்தை திருமணங்களை தடுப்பது தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கை டெல்லியில் நேற்று நடத்தினார்.

    இதில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "குழந்தை திருமணம் ஒரு குற்றம். அதை நாம் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    குழந்தை திருமணத்தை முற்றிலும் நிறுத்தி சரித்திரம் படைப்போம். 23 சதவீதமாக இருக்கும் குழந்தை திருமணங்களை பூஜ்ஜியமாக குறைக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. குழந்தை திருமணத்தை தடுக்க சட்டம் தன் கடமையை செய்கிறது. ஆனால் மக்களும் அரசோடு இணைய வேண்டும்" என்று கூறினார்.

    • தேசிய அளவில் குழந்தை திருமண சராசரி 6.8 சதவீதமாக இருந்து வருகிறது. ஆனால் அசாமில் இந்த இது 11.7 சதவீதமாக உள்ளது.
    • 2026-ம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

    கவுகாத்தி:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த 2019-2020-ம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட தேசிய குடும்ப நல ஆய்வில் அசாமில் குழந்தை திருமணங்கள் மிக அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

    தேசிய அளவில் குழந்தை திருமண சராசரி 6.8 சதவீதமாக இருந்து வருகிறது. ஆனால் அசாமில் இந்த இது 11.7 சதவீதமாக உள்ளது. இதனால் அசாமில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடப்பதும், இதன் காரணமாக அதிக குழந்தைகள் இறப்புக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.

    இந்த அறிக்கையை மையமாக கொண்டு அசாமில் குழந்தை திருமணங்களை தடுக்க மாநில அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

    அம்மாநிலத்தில் 2026-ம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் அமைச்சரவை கூட்டம் கடந்த 23-ந் தேதி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து குழந்தை திருமணங்கள் செய்தவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 14 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ வழக்கு, 14 முதல் 18 வயதுடைய சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அந்த வகையில் கடந்த 15 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் 2,273 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருமணம் செய்து வைத்த மத குருமார்கள் 51 பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் பல்வேறு இடங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கணவன்மார்களை கைது செய்ததால் குடும்பத்தை நடத்த வருமானம் இல்லை எனக்கூறி இளம் பெண்கள் பலர் தங்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சில இடங்களில் போலீஸ் நிலையங்களை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ஐதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி அளித்த பேட்டியில், அசாம் அரசின் இந்த நடவடிக்கையை சாடி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், திருமணம் செய்து கொண்ட பெண்களின் நிலை என்ன? அவர்களை யார் கவனித்து கொள்வார்கள்? 4 ஆயிரம் வழக்குகளை அசாம் அரசு பதிவு செய்துள்ளது. அவர்கள் ஏன் புதிய பள்ளிகளை திறப்பது இல்லை? அசாமில் உள்ள பா.ஜனதா அரசு முஸ்லீம்களுக்கு எதிராக பாரபட்சமாக செயல்படுகிறது.

    மேல் அசாமில் உள்ள நிலம் இல்லா மக்களுக்கு இலவச நிலங்களை கொடுக்கின்றனர். ஆனால் கீழ் அசாமில் உள்ள மக்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை என்றார்.

    இந்தநிலையில் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை. பிற்போக்கு நடைமுறையான குழந்தை திருமணங்களை தடுக்கும் 5 ஆண்டு நடவடிக்கைகளில் ஒரு பகுதி இது ஆகும். 2026-ம் ஆண்டுக்குள் மாநிலத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    குழந்தை திருமணத்தில் இருந்து லட்சக்கணக்கான 19 வயதிற்குட்பட்ட சிறுமிகளை காப்பாற்றவும், இந்த தலைமுறையை துன்பத்தில் இருந்து காப்பாற்றவும் குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கை தொடரும். அனுதாபம் என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. அசாமில் குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

    • சிறுவனும், சிறுமியும் புளியந்தோப்பில் உள்ள எல்லையம்மன் கோவில் வாசலில் நின்று திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • சிறுவனும், சிறுமியும் திருமணம் முடிந்ததும் ஓட்டலுக்கு சென்று நண்பர்களுக்கு விருந்து வைத்து சாப்பிட்டு உள்ளனர்.

    பெரம்பூர்:

    கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது மாமா வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவர் உடன் படிக்கும் 17 வயது சிறுவனை காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் அந்த சிறுவனும், சிறுமியும் புளியந்தோப்பில் உள்ள எல்லையம்மன் கோவில் வாசலில் நின்று திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதுகுறித்து ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் நல குழுவுக்கு வீடியோ ஆதாரத்துடன் புகார் வந்தது. இதுபற்றி குழந்தைகள் நல குழுவினர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் விசாரணை நடத்திய போது காதல் வயப்பட்ட சிறுவனும், சிறுமியும் கடந்த 7-ந்தேதி எல்லையம்மன் கோவில் முன்பு தாலி கட்டி திருமணம் செய்து இருப்பது தெரிந்தது. இதனை அவர்களது நண்பர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து மற்ற நண்பர்களுக்கு அனுப்பி உள்ளனர்.

    தற்போது இது சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிறுவனும், சிறுமியும் திருமணம் முடிந்ததும் ஓட்டலுக்கு சென்று நண்பர்களுக்கு விருந்து வைத்து சாப்பிட்டு உள்ளனர். பின்னர் அவரவர் வீட்டுக்கு வந்து விட்டனர்.

    இதனால் சிறுமிக்கு திருமணம் ஆனது குறித்து வீட்டில் இருந்த உறவினர்களுக்கு தெரியவில்லை. திருமண வீடியோ பதிவு வெளியே வந்த பின்னர்தான் இது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

    போலீசார் விசாரணை நடத்துவது பற்றி தெரிந்ததும் அந்த சிறுவன் தப்பி ஓடி விட்டான். அவனை பிடித்து மேலும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது காதல் ஆசை வார்த்தை கூறி சிறுவன் பாலியல் ரீதியாக உறவில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து சிறுமியை மீட்டு போலீசார் கெல்லீசில் உள்ள மையத்தில் தங்க வைத்து உள்ளனர். அவருக்கு ஆலோசனை வழங்க குழந்தைகள் நல அதிகாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

    திருமணம் செய்த இருவரும் சிறுவன், சிறுமி என்பதால் அவர்கள் மீது என்ன மாதிரியான நட வடிக்கை எடுப்பது என்று போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

    சிறுமியை, சிறுவன் திருமணம் செய்த சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்வதில் தன்னார்வலர்களின் பங்கு மகத்தானது.
    • பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது போன்றவற்றை சமூக நோக்கத்துடன் கண்டறிந்து தகவல் அளிக்க வேண்டும்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்ட த்திற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சீனிவாசன், சரஸ்வதி கூட்டத்தை தொடங்கிவைத்து தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். வட்டார வளமைய ஆசிரியர் பயி ற்றுநர் கவிதா வரவேற்றார்.

    கூட்டத்தில மேற்பார்வை யாளர் ஞானபுகழேந்தி பேசுகையில், கொரோனா பெருந்தொற்றினால் மாண வர்களுக்குஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெ ய்வதில் தன்னார்வலர்களின் பங்கு மகத்தானது. பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது போன்றவற்றை சமூக நோக்கத்துடன் நீங்கள் கண்டறிந்து தகவல் அளிக்க வேண்டும். மாணவர்களின் வாசித்தலை மேம்படுத்த குழந்தைகளுக்கு தொடர் பயிற்சி அளிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக வட்டார ஒருங்கி ணைப்பாளர் ரஞ்சித் நன்றி கூறினார்.

    ×