search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது- குழந்தை திருமணம் செய்து வைத்ததாக 3 பேர் மீது வழக்கு
    X

    15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது- குழந்தை திருமணம் செய்து வைத்ததாக 3 பேர் மீது வழக்கு

    • சிறுமியின் வயதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • திருமணம் செய்து வைத்தது தொடர்பாக தந்தை, கணவர் மாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பாரபட்டி அருகேயுள்ள எருமையாம்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது 15 வயது மகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு எச்.புதுபட்டியை சேர்ந்த கலைஞன் (வயது 25) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    கர்ப்பிணியான அந்த சிறுமி பிரசவத்துக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமியின் வயதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அரூர் அனைத்து மகளிர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது.

    அதன்பேரில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக அவரது தந்தை சின்னசாமி, கணவர் கலைஞன், மாமியார் காந்தா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×