search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கணவர்கள் சிறை சென்றால் மனைவிகளின் நிலை என்ன? - அசாம் அரசுக்கு ஒவைசி கேள்வி
    X

    அசாதுதீன் ஒவைசி

    கணவர்கள் சிறை சென்றால் மனைவிகளின் நிலை என்ன? - அசாம் அரசுக்கு ஒவைசி கேள்வி

    • கடந்த 2 நாட்களில் மட்டும் 2,257 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • குழந்தை திருமணத்திற்கு எதிரான அசாம் அரசின் நடவடிக்கையை அசாதுதீன் ஒவைசி கண்டித்துள்ளார்.

    ஐதராபாத்:

    அசாமில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர், திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தார். அதன்படி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 2 நாட்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 4,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 2,257 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 51 நபர்கள் மத குருக்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போலீசாரின் கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மகன்களை விடுவிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    இந்நிலையில், குழந்தை திருமணத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அசாதுதின் ஒவைசி, கணவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு திருமணம் செய்து கொண்ட சிறுமிகளை யார் கவனிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

    Next Story
    ×