என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாதுதின் ஒவைசி"

    • மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
    • அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.

    புதுடெல்லி:

    வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. பின் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

    இதற்கிடையே, பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

    இந்நிலையில், ஐதராபாத் எம்பியான அசாதுதின் ஒவைசி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் குறித்து பேசியதாவது:

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர் சட்டங்களை ஏற்றுக் கொள்ளாமல் அதனை மகாத்மா காந்தி கிழித்து எறிந்தார். அதுபோலவே, நானும் இந்தச் சட்டத்தைக் கிழிக்கிறேன்.

    கோவில்கள் மற்றும் மசூதிகளின் பெயரால் இந்த நாட்டில் பிரிவினையை உருவாக்க பா.ஜ.க. விரும்புகிறது. இதை நான் கண்டிக்கிறேன். மேலும் 10 திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

    • கடந்த 2 நாட்களில் மட்டும் 2,257 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • குழந்தை திருமணத்திற்கு எதிரான அசாம் அரசின் நடவடிக்கையை அசாதுதீன் ஒவைசி கண்டித்துள்ளார்.

    ஐதராபாத்:

    அசாமில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதை தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர், திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தார். அதன்படி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 2 நாட்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 4,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 2,257 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 51 நபர்கள் மத குருக்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போலீசாரின் கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மகன்களை விடுவிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    இந்நிலையில், குழந்தை திருமணத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அசாதுதின் ஒவைசி, கணவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு திருமணம் செய்து கொண்ட சிறுமிகளை யார் கவனிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

    • வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 80க்கு மேற்பட்டோர் பலியாகினர்.
    • ஜார்க்கண்டில் ரெயில்கள் மோதியதில் 2 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    ஐதராபாத்:

    கேரள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 80க்கு மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலரை தேடி வருகின்றனர். இதேபோல், ஜார்க்கண்டில் ரெயில்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு மற்றும் ஜார்க்கண்ட் ரெயில் விபத்து தொடர்பாக ஐதராபாத் எம்பியான அசாதுதின் ஒவைசி கூறியதாவது:

    வயநாட்டில் நிலச்சரிவு சம்பவம் இயற்கையானது. இதற்கு இயற்கையான காரணம் உண்டு.


    ஆனால் அடிக்கடி ஏற்படும் ரெயில் விபத்துகளை சாதாரணம் என சொல்லமுடியாது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கமுடியாத அரசு இந்த வழக்கில் தவறு செய்துள்ளது. இந்த விபத்துகளால் உயிரிழப்பு மட்டுமின்றி, ரெயில்வே உடைமைகளும் சேதம் அடைகின்றன.

    இது பா.ஜ.க.வுக்கு அரசியல் ரீதியாகவும் பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.

    மேலும், பாரீஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது குறித்து கூறுகையில், இது எங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணம். இந்தப் பதக்கத்தைப் பெற அவர்கள் கடுமையாக உழைத்திருக்க வேண்டும் என பாராட்டு தெரிவித்துள்ளார்.

    ×