என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் 62 கிலோ கஞ்சா பறிமுதல்- 34 பேர் கைது
Byமாலை மலர்14 March 2020 10:21 AM GMT (Updated: 14 March 2020 10:21 AM GMT)
திருவண்ணாமலையில் கஞ்சா விற்றதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதுதொடர்பாக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை கஞ்சா விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 20-ந் தேதி வரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் திருவண்ணாமலை வண்டி மேட்டு தெருவைச் சேர்ந்த சுபாஷினி என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 21-ந்தேதிக்கு பிறகு தொடர் தேடுதல் வேட்டை நடத்தி கடந்த 12-ந்தேதி வரை மேலும் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 பேர் கைது செய்யப்பட்டனர். 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை சமுத்திரம் பகுதியை சேர்ந்த கவிதா, இளையராஜா, தமிழ் ஆகிய 3 பேரும் திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துர்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் கடந்த 12-ந்தேதி வரை திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்றதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இது தொடர்பாக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து மொத்தம் 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை கஞ்சா விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 20-ந் தேதி வரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் திருவண்ணாமலை வண்டி மேட்டு தெருவைச் சேர்ந்த சுபாஷினி என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 21-ந்தேதிக்கு பிறகு தொடர் தேடுதல் வேட்டை நடத்தி கடந்த 12-ந்தேதி வரை மேலும் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 பேர் கைது செய்யப்பட்டனர். 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை சமுத்திரம் பகுதியை சேர்ந்த கவிதா, இளையராஜா, தமிழ் ஆகிய 3 பேரும் திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துர்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் கடந்த 12-ந்தேதி வரை திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்றதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இது தொடர்பாக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து மொத்தம் 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X