என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குலசேகரம் அருகே கடன் தொல்லையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
நாகர்கோவில்:
குலசேகரத்தை அடுத்த உண்ணியூர்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 48). தொழிலாளி.
இவர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததில் ஏற்பட்ட கடன் காரணமாக மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார். கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று வீட்டின் அருகே விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து குலசேகரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குமரேன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுசீந்திரம் அருகே சடையன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மணி(65). இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு வேலைக்குச் செல்ல முடியாமல் இருந்து வந்தார். இதில் மன வேதனையுடன் மணி காணப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்த அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் காளிஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்