search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல்
    X
    தாக்குதல்

    கோவை அருகே முன் விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து

    கோவை அருகே முன் விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை கணபதி அருகே உள்ள காந்தி மாநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் சியாம் (வயது 27). இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    சியாம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்து இருந்தார். நேற்று இரவு இவர் அந்த பகுதியில் உள்ள கடை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சியாமிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் இது கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து ஆட்டோ டிரைவர் சியாமின் வயிற்றில் குத்தினர். இதில் நிலை குலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பின்னர் அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆட்டோ டிரைவர் சியாமை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து சரவணம்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவர் முன் விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் சியாமை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×