search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.பாலகிருஷ்ணன்
    X
    கே.பாலகிருஷ்ணன்

    கொரோனாவில் இருந்து தப்பிக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டும் - பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

    கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வகையில், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 
     
    கொரோனா நோய் அச்சுறுத்தல் நாடு முழுவதும் உருவாகியுள்ளது. மிக எளிதில் பரவும் தன்மை கொண்ட கொரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான பன்முகத் தன்மையிலான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    நோய் கண்டறிவதற்கான பரிசோதனை மையங்களை உடனே மாநிலத்தின் பரவலான இடங்களில் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    நோய் கண்டறியப்பட்டுள்ளவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்கல் மாநிலத்தின் பல இடங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

    கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் அணியும் பாதுகாப்பு உடைகள் போல் தமிழக மருத்துவர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

    கொரோனா வைரஸ் நோயால், முகத்தின் அணியும் முகக் கவசத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் கூடுதல் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது. எனவே முகக் கவசங்கள் குறைந்த விலையிலும், தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது தொலைபேசிகளில் அழைப்பை மேற்கொள்ளும்போது கொரோனா நோய் தொடர்பான விழிப்புணர்வு அறிவிப்பு ஆங்கிலத்தில் வருவதை தமிழிலும் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினை தீரும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகள், கேளிக்கை மற்றும் விளையாட்டுக் மைதானங்கள் (ஐபில் உட்பட),  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்  பொதுத்தேர்வு நடைபெறும் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும்.

    கொரோனா வைரசை தடுப்பதற்கு கேரள அரசு மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் போல், தமிழக அரசும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×