search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மனைவி பேசாத விரக்தியில் மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை

    விழுப்புரம் அருகே மனைவி பேசாத விரக்தியில் மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    விழுப்புரம்:

    மனைவி பேசாத விரக்தியில் மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    விழுப்புரம் அருகே உள்ள தெளி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் பவுல்ராஜ் (வயது 32), ஏ.சி. மெக்கானிக். இவருக்கும் கிரேசி (30) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    பவுல்ராஜிக்கு குடிப்பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று பவுல்ராஜ், மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் அவரிடம் அவரது மனைவி கிரேசி கோபப்பட்டு எதுவும் பேசாமல் இருந்துள்ளார்.

    இதனால் விரக்தியடைந்த பவுல்ராஜ் மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×