என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் செல்போன் பறிக்க முயன்ற 4 பேர் கைது
மதுரை:
மதுரை கே.புதூர் சங்கர் நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன் (வயது 31). இவர் நேற்று மதியம் கே.புதூர் 120 அடி சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த கொந்தகை மேடு பகுதியை சேர்ந்த காளிமுத்துவின் மகன் மனோஜ் குமார் (19), மலைச்சாமி மகன் கார்த்திக் ராஜா (21) ஆகிய இருவரும் சேர்ந்து ராஜபாண்டி வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை பிடித்து கே.புதூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ராஜபாண்டி அளித்த புகாரின் பேரில் மனோஜ் குமார் மற்றும் கார்த்திக் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நடுத்தெருவைச் சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (26). இவர் நேற்று மாட்டுத்தாவணி பஸ்நிலையம் 6-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த மைதீன் (36) மற்றும் கக்கன் நகரைச் சேர்ந்த சுரேஷ் (30) ஆகியோர் சிவப்பிரகாஷ் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றனர்.
ஆனால் அவர்களை அங்கிருந்த மக்கள் விரட்டிப் பிடித்தனர். சிவப்பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைதீன் மற்றும் சுரேஷை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்