search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுரையில் செல்போன் பறிக்க முயன்ற 4 பேர் கைது

    மதுரையில் வெவ்வேறு இடங்களில் செல்போன்களை பறிக்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை கே.புதூர் சங்கர் நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன் (வயது 31). இவர் நேற்று மதியம் கே.புதூர் 120 அடி சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த கொந்தகை மேடு பகுதியை சேர்ந்த காளிமுத்துவின் மகன் மனோஜ் குமார் (19), மலைச்சாமி மகன் கார்த்திக் ராஜா (21) ஆகிய இருவரும் சேர்ந்து ராஜபாண்டி வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை பிடித்து கே.புதூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ராஜபாண்டி அளித்த புகாரின் பேரில் மனோஜ் குமார் மற்றும் கார்த்திக் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நடுத்தெருவைச் சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (26). இவர் நேற்று மாட்டுத்தாவணி பஸ்நிலையம் 6-வது நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த மைதீன் (36) மற்றும் கக்கன் நகரைச் சேர்ந்த சுரேஷ் (30) ஆகியோர் சிவப்பிரகாஷ் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றனர்.

    ஆனால் அவர்களை அங்கிருந்த மக்கள் விரட்டிப் பிடித்தனர். சிவப்பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைதீன் மற்றும் சுரேஷை கைது செய்தனர்.

    Next Story
    ×