search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி மாயம்
    X
    மாணவி மாயம்

    போடி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்

    போடி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகில் உள்ள திருமலாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அதில் கலைச்செல்வி (வயது16). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து மாணவியின் சகோதரி காயத்ரி போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் போடி கரக்கடை வீதியை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரசாத் (17) என்பவர்தான் தனது தங்கையை கடத்தி சென்றிருக்க கூடும் என தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    தேனி மாவட்டம் ஓடைப்பட்டி மேலப்பட்டியைச் சேர்ந்தவர் கெப்புராஜ் (வயது 35). இவரது மனைவி சுகாசினி (27). இவருக்கு கெப்புராஜ் 2-வது கணவர் ஆவார். ஏற்கனவே சுகாசினிக்கு திருமணம் ஆகி முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். முதல் கணவர் மூலம் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் சுகாசினி சின்னமனூரில் தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது பற்றி கெப்புராஜ் ஓடைப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுகாசினி எங்கு சென்றார்? அவரை யாரும் கடத்தி சென்றார்களா? என்று விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×