search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    குஜிலியம்பாறை அருகே ஜீப் மோதி 2 விவசாயிகள் பலி

    குஜிலியம்பாறை அருகே பைக் மீது ஜீப் மோதிய விபத்தில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    குஜிலியம்பாறை:

    குஜிலியம்பாறை அருகே டி.கூடலூர் திருமக்கம்பட்டியை சேர்ந்தவர்கள் மணிவேல் (வயது45), பழனிசாமி (35), முருகேசன் (40). விவசாயிகளான 3 பேரும் காய்கறிகளை கரூர் உழவர் சந்தைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். டி.கூடலூர் பூவாலம்மன் கோவில் அருகே எதிரே தனியார் மில் ஜீப் வந்தது. எதிர்பாராத விதமாக ஜீப் பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    மணிவேல் மற்றும் பழனிசாமி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய முருகேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எரியோடு இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் வழக்குப்பதிவு செய்து ஜீப் டிரைவர் கனகராஜிடம் விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×