என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில் சிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சருக்கு இந்து முன்னணி கோரிக்கை
Byமாலை மலர்28 Feb 2020 2:21 PM GMT (Updated: 28 Feb 2020 2:21 PM GMT)
கோவில் புராதான சிலைகள், சொத்துகளை பாதுகாப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செந்தூர்:
இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமானதாக, ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளரும், டி.ஜி.பி.யும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு இந்து கோவில்களின் நிர்வாகத்தில் மிகுந்த மெத்தனமாக நடந்து கொள்கிறது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை நேர்மையாக விசாரித்த போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்காமல் இருப்பதற்கு காட்டப்பட்ட அவசரம், தற்போது அந்த வழக்குகளில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு அரசு காட்டவில்லை என்று தோன்றுகிறது.
சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மாயமான பின்னணியில் பல முக்கிய பிரமுகர்கள் இருப்பார்கள் என்றும், மிகப்பெரிய மாபியா கும்பலின் சதி உள்ளது என்றும் இந்து முன்னணி கருதுகிறது. எனவே, கோவில் புராதான சிலைகள், சொத்துகளை பாதுகாப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமானதாக, ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளரும், டி.ஜி.பி.யும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு இந்து கோவில்களின் நிர்வாகத்தில் மிகுந்த மெத்தனமாக நடந்து கொள்கிறது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை நேர்மையாக விசாரித்த போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்காமல் இருப்பதற்கு காட்டப்பட்ட அவசரம், தற்போது அந்த வழக்குகளில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு அரசு காட்டவில்லை என்று தோன்றுகிறது.
சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மாயமான பின்னணியில் பல முக்கிய பிரமுகர்கள் இருப்பார்கள் என்றும், மிகப்பெரிய மாபியா கும்பலின் சதி உள்ளது என்றும் இந்து முன்னணி கருதுகிறது. எனவே, கோவில் புராதான சிலைகள், சொத்துகளை பாதுகாப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X