என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆத்தூர் அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே உள்ள கீரனூரை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவரது மகன் முத்துக்குமார்(வயது 30). இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இன்பி என்பவருடன் திருமணமாகி, முகிஷா என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது.
முத்துக்குமார் பழையகாயல் பகுதியில் உள்ள தொழிற்சாலை வளாகம் ஒன்றில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இன்பி தனது கணவரிடம் கடந்த 4 நாட்களாக பேசாமல் இருந்துள்ளார். இதில் மனமுடைந்த முத்துக்குமார் நேற்று அவரது வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்