search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஆத்தூர் அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

    ஆத்தூர் அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    ஆத்தூர் அருகே உள்ள கீரனூரை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவரது மகன் முத்துக்குமார்(வயது 30). இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இன்பி என்பவருடன் திருமணமாகி, முகிஷா என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது.

    முத்துக்குமார் பழையகாயல் பகுதியில் உள்ள தொழிற்சாலை வளாகம் ஒன்றில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இன்பி தனது கணவரிடம் கடந்த 4 நாட்களாக பேசாமல் இருந்துள்ளார். இதில் மனமுடைந்த முத்துக்குமார் நேற்று அவரது வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×